Wednesday, March 4, 2015

வென்றார் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவாலின் விருப்பப்படி ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுவிலிருந்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் நீக்கப்பட்டார்கள். முதல்வராகவும், கட்சி அமைப்பாளராகவும் அர்விந்த் கெஜ்ரிவால் நீடிக்கிறார். ஜனநாயகம் நிறைந்த கட்சிதான். தனி நபர் சார்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய அரசியல் மரபில் தனிமனிதன் சார்ந்த அரசியல் மையம் தானாக உருவாகிவிடுகிறது. தனி சாதனையாளர்களை வணங்கும் மக்களின் மனப்போக்கு இதற்குக் காரணம். தமிழ்நாடு தனி நபர் சார்ந்த அரசியல் கட்சிகள் நிறைந்த மாநிலம். ஆந்திரா போன்றவையும் இப்படித்தான். பாஜக போன்ற ஜனநாயகம் நிறைந்த கட்சியிலும் மோடி என்ற தனி பிம்பம்தான் இப்போது ஆட்சி செலுத்துகிறது. தனி பிம்பங்களின் பிரதிகளாக இருப்பதை மக்கள் விரும்புகிறார்கள். தாங்களே தனி அதிகாரம் பெற்றது போன்ற மாயை தனிமனித மனதிற்குத் தேவையாக இருக்கிறது. அதை தலைவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment